;
Athirady Tamil News

திருப்பதியில் உண்டியல் வருவாய் அதிகரிப்பு- இந்த ஆண்டு ரூ.1500 கோடியை எட்டும்..!!

0

திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதன் மூலம் உண்டியல் வருவாய் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ரூ.128 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் ரூ.129.93 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி, ஜூலை மாதம் இதுவரை ரூ.106 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு முடிவுக்குள் உண்டியல் வருவாய் ரூ.1500 கோடியை எட்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இது போக தங்கம், வெள்ளி, வைரம் தனியாக கணக்கில் சேர்க்கப்படும். திருப்பதியில் நேற்று 80,815 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,562 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.82 கோடி உண்டியல் வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.