;
Athirady Tamil News

ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிய வாலிபர்- சம்மட்டியால் பிளாட்பாரத்தை உடைத்து மீட்பு..!!

0

ஆந்திர மாநிலம், நந்தியாலில் இருந்து நேற்று இரவு விஜயவாடாவுக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டு இருந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். ரெயிலில் ரவிக்குமார் 30) என்ற வாலிபர் பயணம் செய்தார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரவிக்குமார் இறங்க வேண்டும்.

ஆனால் அவர் ரெயிலில் தூங்கிக் கொண்டு இருந்ததால் ரெயில் கிளம்பும்போது தூக்க கலக்கத்தில் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது நிலை தடுமாறிய ரவிக்குமார் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கினார். வலியால் அவர் அலறி துடித்தார். இதனைக் கண்ட பயணிகள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தை சம்மட்டியால் அடித்து உடைத்து ரவிகுமாரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.