;
Athirady Tamil News

இந்தியாவில் 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலையில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

0

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் தூரத்துக்கான 150 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசத்தில் நடைபயணத்தை முடித்த பிறகு கடந்த 3-ந்தேதி காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தான் சென்றார். ராகுல் காந்தி இன்று காலை 6 மணிக்கு பூந்தி மாவட்டத்தில் பாதயாத்திரை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதோதரா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டனர். 23-ந்தேதி வரை அவர் ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொள்வார். இந்த நிலையில் இந்தியாவில் 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலை இல்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- நாட்டில் 100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை முறியடித்து உள்ளனர். இந்தியாவில் இளைஞர்களின் அவல நிலையை இந்த வேலையின்மை புள்ளி விவரங்கள் தெளிவாக காட்டுகின்றன. இளைஞர்களின் கண்களில் கண்ணீரும், காலில் கொப்பளங்களும் உள்ளன. ஆனால் தங்கள் வேலை வாய்ப்பை பெற்று நாட்டை ஒருங்கிணைக்கும் வரை அவர்கள் நிறுத்த மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.