;
Athirady Tamil News

காசல்ரி நீர்த்தேக்கத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!!

0

ஹட்டன் காசல்ரி நீர்த்தேக்கத்திலிருந்து பெண் ஓருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு வழங்கிய தகவலினை அடுத்து ஆரம்ப கட்ட விசாரணையின் பின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் காபெக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கமலம் வயது 75 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் இல்லாததனை அறிந்த உறவினர்கள் அவரை தேடிய போது குறித்த பெண்ணின் சடலம் நீரில் மிதப்பதனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் மரணித்தாரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.