;
Athirady Tamil News

திடீரென பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் படை !!

0

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவதை தடுக்கும் வகையில் கொட்டுகச்சிய நவோதயா மகா வித்தியாலயத்தில் இன்று (13) பொலிஸ் தேடுதல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி காலை 6 மணி முதல் பாடசாலை தொடங்கும் வரை பள்ளிக்கு வரும் மாணவர்களின் பைகள், உடைகள் சோதனை செய்யப்பட்டன.

அண்மைக்காலமாக பாடசாலைகளுக்கு பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கொண்டு வருவதால் பாடசாலை நடவடிக்கைகளில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதை கருத்திற்கொண்டு புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றி அவசர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக 30 ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டனர். .

இதன்போது பாடசாலையைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.