;
Athirady Tamil News

தெல்லிப்பழை புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் ஒரு தொகுதி சத்துமா கையளிப்பு!!

0

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு சிவபூமி அறக்கட்டளையியினரால் மேலும் ஒரு தொகுதி சத்துமா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை(13.12.2022) காலை வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவில் வைத்து சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் கலந்து கொண்டு நோயாளருக்கான 50 சத்துமாப் பேணிகளை மேற்படி சிகிச்சைப் பிரிவினரிடம் நேரடியாகக் கையளித்தார்.

இதேவேளை, ஏற்கனவே பல தடவைகள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைப் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு நோயாளர்களுக்குச் சிவபூமி அறக்கட்டளையினரால் சத்துமாக்களும், மருந்துப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.