;
Athirady Tamil News

அச்சுவேலியில் கடை உடைத்து திருடிய குற்றத்தில் தம்பதியினர் கைது!

0

யாழ்ப்பாணம் , அச்சுவேலி வளலாய் பகுதியில் உள்ள மீன் பிடி உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை உடைத்து , அங்கிருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் , தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தினை உடைத்து , அங்கிருந்த சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி உபகரணங்கள் திருடப்பட்டு இருந்தன.

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த தம்பதியினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றை மீட்டுள்ளனர்.

கணவன் மனைவி இருவரையும் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.