;
Athirady Tamil News

போலியான கல்விச்சான்றிதழ் – காவல்துறை சேவையில் இணைந்த நபர் கைது!!

0

போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து காவல்துறை சேவையில் இணைந்து கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாவக்கச்சேரி காவல்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை உத்தியோகஸ்தரே இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் கடந்த 2020 ஆம் ஆண்டு காவல்துறை சேவையில் இணைந்துக்கொண்டுள்ளதுடன் கல்வி தகுதிக்கு தேவையான கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத அவர், தேர்ச்சி பெற்றது போன்று கல்விச்சான்றிதழை மாற்றியுள்ளார்.

இந்த காவல்துறை உத்தியோகஸ்தர் கடந்த 2012 ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

அவரது கல்விச்சான்றிதழ் போலியானது என தெரியவந்த போது, அவர் வாழைச்சேனை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.இதனையடுத்து அவர் கடமைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் காவல்துறை சேவையில் இருந்து விலகி சென்றதாக அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து எனவும் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.