;
Athirady Tamil News

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்காவற்துறை பொலிஸார்!

0

வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை, உரியவரை கண்டறிந்து அவரிடம் கையளித்த யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸாரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உள்ளிட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்ட போது வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பை ஒன்று இருப்பதனை அவதானித்தனர்.

அதனை பரிசோதித்த போது, அதனுள் 35 ஆயிரம் ரூபா பணம், தங்க ஆபரணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சில காணப்பட்டன. ஆவணங்களின் அடிப்படையில் , குறித்த பையானது, ஊர்காவற்துறை பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மதகுரு ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டது.

அதனை அடுத்து , அது தொடர்பில் மதகுருவுக்கு தகவல் வழங்கப்பட்டது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு மதகுருவை அழைத்து , அதனை அவரிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி கையளித்தார்.

மதகுரு தனது பையினை பெற்றுக்கொண்டு பொலிஸாருக்கு நன்றி தெரிவித்து சென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.