;
Athirady Tamil News

மத்திய பிரதேசத்தில் பயங்கரம்: பிசியான சாலையில் பைக்கை துரத்திச் சென்று கல்லூரி மாணவரை குத்திக்கொன்ற சிறுவர்கள்!!

0

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பிரதான சாலையில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லூரி மாணவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 31ம் தேதி மாலையில் கல்லூரி மாணவர் ஆயுஷ் (வயது 22) தனது இரண்டு நண்பர்களுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பிரதான சாலையில் நெரிசல் அதிகமாக இருந்தது. ஆயுஷ் ஹாரன் அடித்து, முன்னால் நின்றுகொண்டிருந்த சிறுவர்களிடம் வழிவிடும்படி கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவர்கள் ஆயுஷின் பைக்கை பின்தொடர்ந்து துரத்தினர். ஒரு சிறுவன் பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்த ஆயுஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த ஆயுஷ் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இந்த கத்திக்குத்து தொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.