;
Athirady Tamil News

வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் இன்று!!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களினூடாக வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அதற்காக மூன்றரை நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அறிவித்தலில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி, இடம், பிணைத்தொகை விபரம், வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

நாட்டின் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்காக வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று (04) வெளியிடப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.