;
Athirady Tamil News

வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு!!

0

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு பெற்றது.

அதேபோல் திருப்பதியில் சீனிவாசம், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஆகிய 3 இடங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் 12-ந்தேதி முதல் வழக்கம்போல் வினியோகம் செய்யப்படும்.

பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று சாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.