;
Athirady Tamil News

கேரளாவில் சென்னை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை- தேர்வு எழுத அனுமதிக்காததால் விபரீத முடிவு!!

0

கேரள மாநிலம் நடுக்காவு பகுதியை சேர்ந்தவர் முகமது அனிகா (வயது 19). சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு ஒழுங்காக செல்லவில்லை எனக்கூறி கல்லூரி நிர்வாகம் இவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊருக்கு வந்த அனிகா, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அனிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில் கல்லூரி நிர்வாகத்தினரின் நெருக்கடியால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.