கபில சந்திரசேன மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம மந்திரி கபில சந்திரசேன, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி காவல்துறை மா அதிபர் இது குறித்த விசாரணையை கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளார்.
கொல்லுப்பிட்டிய பகுதியில் பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவுக்குச் சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணைகள்
இது குறித்து விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வீட்டின் உரிமையாளரான அரவிந்த டி சில்வா, அவரது மனைவி மற்றும் அதன் ஊழியர்களிடம் விரிவாக விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் கிடைக்கவிருக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை ஆகியவை இந்த மர்ம மரணத்தின் உண்மையான விவரங்களை வெளிப்படுத்தும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற ஏர்பஸ் ஒப்பந்தத்தில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் மத்தியில் இருந்த கபில சந்திரசேன, நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது மற்றும் பொய் பிடியானைகளை வழங்கியது தொடர்பான பிடியாணையின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவிருந்த அதே நாளில் இந்த மரணம் நிகழ்ந்திருந்தது.
இத்தகைய ஒரு முக்கியமான மற்றும் சட்டரீதியாக சிக்கலான தருணத்தில் ஒரு மூத்த கிரிக்கெட் வீரர் தனது இல்லத்தில் மரணமடைந்திருப்பது சமூகத்தில் பெரும் விவாதத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.