;
Athirady Tamil News

நாட்டில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை சடுதியாக அதிகரிப்பு!

0

உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 220 ரூபா என்ற உத்தரவாத விலையில் நாளை (10) முதல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

மொத்த விற்பனை
கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை (CWE) ஊடாக இந்தக் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் உருளைக்கிழங்குகள், லங்கா சத்தோச விற்பனை நிலையங்கள் ஊடாக மக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.