;
Athirady Tamil News

மகாராஷ்டிராவில் லாரி-பஸ் மோதல்: 10 பேர் பலி!!

0

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் அம்பர்நாத்தில் இருந்து 50 பேருடன் சொகுசு பஸ் ஒன்று சீரடி நோக்கி சென்றது. நாசிக்கில் உள்ள பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.