;
Athirady Tamil News

ஆந்திராவில் மகன், மகளை கோடாரியால் வெட்டி தந்தை தற்கொலை!!

0

ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் புரட்டுத்துரு மண்டலம், நக்கலடின்னா பகுதியை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 47). இவரது மனைவி துளசியம்மா. தம்பதிக்கு அபிதேஜா ரெட்டி (15) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். அங்குள்ள பள்ளியில் அபி தேஜா 10-ம் வகுப்பும், பவானி 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். நரசிம்ம ரெட்டிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அதிகாலை அபி தேஜா பவானி தூங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்ட தாய் துளசியம்மா அறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மகனும் மகளும் கோடாரியால் தலையில் வெட்டப்பட்டு படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களது அருகில் நரசிம்ம ரெட்டி மயங்கிய நிலையில் கிடந்தார்.

3 பேரையும் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நரசிம்ம ரெட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பவானி கடப்பா ரிம்ஸ் ஆஸ்பத்திரிக்கும், அபி தேஜா ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மனநலம் பாதிக்கப்பட்டதால் நரசிம்மா ரெட்டி, பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக கதவை தாழிட்டு கொண்டு கோடாரியில் தலையில் தாக்கி விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.