;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 79 ஆக குறைந்தது!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 114 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 233 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாள்தோறும் அதிகரிக்க தொடங்கியது.

சுமார் 3 வருடங்கள் கடந்த நிலையில் நேற்று டெல்லியில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 163 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 48 ஆயிரத்து 472 ஆக உயர்ந்தது. தற்போது 2,035 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 84 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,726 ஆக நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.