;
Athirady Tamil News

பல்கலைக்கழக மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் !!

0

இன்று பகல் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவி என தெரியவந்துள்ளது.

அத்துடன் யுவதியை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞனும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் கற்கும் மாணவர் என்றும் இருவரும் காதலர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்ற இளைஞனைக் கைது​ செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு குதிரை பந்தய திடலில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.