;
Athirady Tamil News

எஸ். ஜெய்சங்கர் – அலி சப்ரி சந்திப்பு !!

0

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என இந்திய நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (19) இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு அத்தியாவசியமான இந்தத் தருணத்தில், மேலும் ஒத்துழைப்பை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன்போது அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்று காலை எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதுடன், தமிழ்த் தரப்பு அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.