;
Athirady Tamil News

மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு !!

0

இலங்கையால் ஒவ்வொரு வருடமும் சுமார் 4,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், வருடாந்தம் அண்ணளவாக 1,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராட குடிமக்களைத் திரட்டும் சமூக நடத்தை மாற்றத் தொடர்புக்கான உத்தியை (SBCC 2021) செயல்படுத்துவதற்கும், ஆதரவளிப்பதற்கும், இந்த நோயைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும், Breastcancerdetect.health.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வியாழக்கிழமை (18) தொடங்கப்பட்டது.
இந்த மருத்துவ சேவைகள் அடுத்த வருடத்துக்குள் மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் மற்றும் மையங்கள் உருவாகும்போது மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.