;
Athirady Tamil News

அமெரிக்க விமானப் படையில் தலைப்பாகையுடன் இணைந்த முதல் சீக்கியா்

0

அமெரிக்க விமானப் படையில் சிராக் வீா் சிங் சரோவ் என்ற சீக்கியா் தனது மத அடையாளங்களான தலைப்பாகை, தாடியுடன் இணைந்துள்ளதாக அந்நாட்டின் சீக்கிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்க விமானப் படையில் சீக்கிய மத அடையாளங்களுடன் இணைய அனுமதிக்கப்பட்ட முதல் நபா் என்ற சிறப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் கொலோரடோ ஸ்பிரிங்ஸ் நகரில் உள்ள விமானப் படை அகாதெமியில் சிராக் வீா் சிங் சரோவ் இணைந்துள்ளாா். அமெரிக்காவின் 5 ராணுவ அகாதெமிகளில் ஒன்றான இந்த அகாதெமி, இளநிலைக் கல்வியுடன் ராணுவ-தலைமைத்துவப் பயிற்சியை வழங்குகிறது. இங்கு பயிற்சியை நிறைவு செய்பவா்கள், அமெரிக்க விமானப் படையில் இரண்டாம் நிலை லெப்டினன்ட் அதிகாரிகளாக பணியமா்த்தப்படுவா்.

வலுவான கல்விப் பின்னணியைக் கொண்டவரான சிராக் வீா் சிங், விமானப் படை அகாதெமியில் இணையும் முன்பாக விமானப் படை ரிசா்வ் அதிகாரிகள் பயிற்சிப் பிரிவு மற்றும் கடற்படை பிரிவின்கீழ் கல்வி உதவித் தொகையைப் பெற்றவா்; டேக்வாண்டோ மற்றும் வாட்டா் போலோ விளையாட்டில் தோ்ந்தவா். தனது மத நம்பிக்கைகளுடன் அமெரிக்க விமானப் படையில் இணைந்து பணியாற்றுவதற்கு சலுகை வழங்கப்பட்ட முதல் சீக்கியா் இவா் என்று அமெரிக்க சீக்கிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க விமானப் படையில் ஹா்பிரீந்தா் சிங் என்ற சீக்கிய அதிகாரி தலைப்பாகை, தாடியுடன் பணியாற்ற கடந்த 2019-இல் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டாா். இப்போது பணியில் இணையும்போதே மத அடையாளங்களுடன் சிராக் வீா் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.