;
Athirady Tamil News

நைஜீரிய பிரஜை ஒருவர் இலங்கையில் கைது!!

0

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான, கங்கொடவில பிரதேசத்தில் வைத்து நேற்று (22) பிற்பகல் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயதுடைய குறித்த நபர், கைது செய்யப்பட்ட போது அவரது மடிக்கணினியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நைஜீரியர் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜை இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.