;
Athirady Tamil News

கரையோர ரயில் போக்குவரத்து பாதிப்பு!!

0

சமுத்திரதேவி கடுகதி ரயில் இன்று காலை களுத்துறை நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது.

இதன் காரணமாக கரையோர ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது, ​​கடற்படை முகாமிற்கு முன்பாக ரயில் தடம்புரண்டுள்ளது.

அதன்படி தற்போது கரையோர ரயில் பாதையில் ஒருவழி பாதையில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.