;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட இந்துக் கோவில்கள் – சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான வசனங்கள்!!!

0

அண்மைய நாட்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள முக்கியமான மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

கோவில்கள் தாக்கப்பட்டு சூறையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கோவில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வசனங்களும் எழுதப்பட்டுள்ளன.

குறித்த செயலுக்காக அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதல்கள், மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயனண் கோவில், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவில் மற்றும் மெல்போர்னில் உள்ள இஸ்கான் கோவில் என்பவற்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இந்தியாவிற்கு எதிரான வசனங்களும் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பினர் இணைந்து வெளி உத்தரவுகளுக்கு அமைய இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.