;
Athirady Tamil News

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த பெண்..! அதிர்ச்சிக்குள்ளாகிய பரபரப்பு சம்பவம் !!

0

அமெரிக்காவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 82 வயது பெண் இறுதிச்சடங்கின் போது உயிருடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை அன்று, நியூயார்க்கின் போர்ட் ஜெபர்சனில் உள்ள Water Edge Rehab மற்றும் நர்சிங் மையத்தில் 82 வயது பெண்ணொருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் நான்கு மைல் தொலைவில் உள்ள மயான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு சென்றதும் அரை மணிநேரம் கழித்து, குறித்த மூதாட்டி சுவாசித்துக் கொண்டிருப்பதை இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒருவர் கவனித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அப்பெண் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை என சஃபோல்க் கவுண்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில அட்டர்னி ஜெனரல் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கும், அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் இது தேவையற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மோசமான சூழ்நிலை’ என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.