;
Athirady Tamil News

4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ள சதொச!!

0

நான்கு வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பொருட்களை இன்று (09) முதல் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என சதொச தெரிவித்துள்ளது.

இதன்படி பருப்பு ஒரு கிலோ கிராமின் புதிய விலை 305 ரூபா, சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம் புதிய விலை 164 ரூபா, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை பச்சை அரிசியின் புதிய விலை ஒரு கிலோகிராம் 179 ரூபா,ஒரு கிலோ கிராம் வெள்ளை நாட்டரிசியின் புதிய விலை 180 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.