;
Athirady Tamil News

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி!!

0

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் (வயது 79) உடல்நலக்குறைவு காரணமாக, ராஞ்சி நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து பரிசோதனை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார். சிபு சோரன் மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்துள்ளார். 2005ல் 10 நாட்கள் மட்டுமே அவர் பதவி வகித்தார்.

அதன்பின்ன் கடந்த 2008 முதல் 2009 வரையிலும் பின்னர் 2009-2010 காலகட்டத்திலும் முதல்வராக பதவி வகித்து உள்ளார். மத்திய நிலக்கரித்துறை மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார். தற்போது அவரது மகனும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.