;
Athirady Tamil News

உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று பயணம்!!

0

பிரதமர் நரேந்திர மோடி இன்று 2 மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி பிரதமர் மோடி உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீட்டு மாநாடு, வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். காலை 10 மணியளவில் லக்னோவில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். உலகளாவிய வர்த்தகக் கண்காட்சி மற்றும் முதலீட்டாளர்களுக்கான இன்வெஸ்ட் உ.பி. 2.0 என்ற அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லக்னோ நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிற்பகல் மகாராஷ்டிரா வரும் பிரதமர் மோடி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இருந்து மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத் மற்றும் மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ஆகிய ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.