;
Athirady Tamil News

முரண்பாடானவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுக்கிறார்கள்- பாஜக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!!

0

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பதவியில் இருந்தபோது முரண்பாடாக செயல்பட்டவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்குவதை காங்கிரஸ் எதிர்க்கும். ஒய்வு பெற்றவர்களுக்கோ, படைத்தளபதிகளுக்கோ, நீதிபதிகளுக்கோ ஆளுநர் பதவி கொடுப்பதில் நாங்கள் விமர்சனத்தை முன்வைக்கவில்லை.

ஆனால் பிரச்சனைக்குரிய தீர்ப்புகளை சொன்னவர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள். இதுபற்றி கேட்டால், மற்றவர்கள் கொடுக்கவில்லையா? என்கிறார்கள். புகழ்பெற்றவர்களுக்கு நாங்கள் பதவி அளித்தோம். ஆனால் இவர்கள் முரண்பாடானவர்களுக்கு அளிக்கிறார்கள். அயோத்தி விஷயத்தில் தீர்ப்பு சொன்னவர்கள், 2ஜி வழக்கில் தீர்ப்பு சொன்னவர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறார்கள். இதுதான் நாங்கள் செய்ததற்கும், அவர்கள் செய்வதற்கும் உள்ள வித்தியாசம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.