;
Athirady Tamil News

பிறந்தநாள் கொண்டாடியதால் தகராறு: அரசு பெண் அதிகாரி 4 வயது மகனுடன் மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி!!

0

ஊரப்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பிரேமலதா. இவர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்வளர்ச்சித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று பிரேமலதாவின் மூத்த மகனின் பிறந்தநாள் விழாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வீட்டில் கொண்டாடினர். அப்போது பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பிரேமலதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரேமலதா மிகவும் மன வேதனையில் இருந்தார். இந்நிலையில் இன்று காலை பிரேமலதா, தனது 4 வயதான இரண்டாவது மகனை அழைத்துகொண்டு ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் அவர், மகனுடன் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதற்கிடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் மகனுடன் நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்த மின்சார ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினர். எனினும் ரெயில் மெதுவாக சென்று தண்டவாளத்தில் நின்ற பிரேமலதா மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு ஆம்புலன்சு வர முடியாது என்பதால் பயணிகள் உதவியுடன் காயம் அடைந்த பிரேமலதாவையும், அவரது மகனையும் அதே மின்சார ரெயிலில் ஏற்றி தாம்பரம் வந்தனர். இதற்குள் இது பற்றி ரெயில்வே போலீசுக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சு ஊழியர்கள் பிரேமலதாவையும் அரவது மகனையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகனின் பிறந்த நாள் கொண்டாடியதால் ஏற்பட்ட குடும்ப தகராறில் பிரேமலதா தனது மகனுடன் சேர்ந்து ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. சரியான நேரத்தில் மின்சார ரெயிலை டிரைவர் நிறுத்தியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். மின்சார ரெயிலை சாதுர்யமாக நிறுத்திய டிரைவரை பொது மக்கள் பாராட்டினர். இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.