;
Athirady Tamil News

சாதாரணதர பெறுபேறு : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் படைத்த சாதனை

0

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது.

வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின்படி 26 மாணவிகள், 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

சிறந்த பெறுபேறுகள்
அத்துடன் 17 மாணவிகள் 8 பாடங்களிலும் ஏ சித்திகளையும், 17 மாணவிகள் ஏழு பாடங்களிலும் ஏ சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் 08 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் 576 மாணவர்கள் 9 ஏ பெறுபேற்றை பெற்றிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.