;
Athirady Tamil News

காப்பகத்தில் எட்டு குழந்தைகளுக்கு திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் – போலீஸ் விசாரணை!!

0

திருச்சி அருகே, ஆதரவற்றோர் காப்பகத்தில் எட்டு கைக்குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் இயங்கிவரும் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகத்தில், சுமார் 30 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எட்டு குழந்தைகளுக்கு திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலில் ஏதேனும் பிரச்சினையா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.