;
Athirady Tamil News

அமெரிக்காவில் கடத்தல் படகுகள் கவிழ்ந்து 8 பேர் பலி!!

0

அமெரிக்காவில் உள்ள சான்டீகோ கறுப்பு கடற்கரை பகுதிகளில் படகுகளில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் 2 கடத்தல் படகுகளில் சுமார் 15 பேர் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடும் பனிமூட்டம் இருந்ததால் அந்த படகுகள் கடலின் ஆழம் குறைந்த பகுதிக்கு சென்றுவிட்டது. திடீரென அந்த 2 படகுகளும் கவிழ்ந்துவிட்டது. இதனால் அதில் பயணம் செய்த 15 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இது பற்றி அறிந்ததும் கடலோர மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்த பகுதியில் கடும்பனி நிலவியதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு இறந்த 8 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. அந்த பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருந்ததால் அவர்கள் நீந்தி உயிர் தப்பி இருக்கலாம் என தெரிகிறது. இதில் சில பெண்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.