;
Athirady Tamil News

யாழில் குடு விற்ற பெண்ணும் , வாங்க சென்ற மாணவன் உள்ளிட்ட 10 பேரும் கைது!!

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகவளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரும், அவரின் வாடிக்கையாளர்கள் 10 பேரும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக குடு போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட குற்றச்சாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த பெண் வியாபாரியிடம் குடு வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.