;
Athirady Tamil News

ராஜஸ்தானில் 9 வயது சிறுமி படுகொலை- வாலிபர் வெறிச்செயல்!!

0

டெல்லியில் இளம் பெண் ஸ்ரத்தாவை அவரது காதலன் அப்தாப் படுகொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து மும்பை, ராஜஸ்தான் உள்பட நாட்டின் சில இடங்களில் நடைபெற்ற சம்பவங்களில் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராஜஸ்தானில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள உதய்ப்பூர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் கடந்த 29-ந் தேதி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மவுலி பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஒரு பிளாஸ்டிக் பைக்குள் சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியுடன் பள்ளியில் படித்து பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திய கமலேஷ் என்பவர் சிறுமியை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.