;
Athirady Tamil News

கோவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி !!

0

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள தருமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்வின்போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது கோவில் குளத்தில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.