;
Athirady Tamil News

அணுமின் நிலையங்களை கண்காணிக்க வாய்ப்பு- இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்!!

0

இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கை தீவு தேசம் சீனாவுக்கு நட்பு நாடாக விளங்கி வருகிறது. இதனால் சமீப காலமாக சீனாவின் ராணுவ நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளையும் சீன ராணுவம் அளித்து வருகிறது. இதற்கிடையே இலங்கையின் தொன்ட்ரா விரிகுடாவிற்கு அருகிலுள்ள காடுகளில் சீன அறிவியல் அகாடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் ரேடார் தளத்தை அமைக்க பரிசீலித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்திய பெருங்கடலில் மேற்கத்திய கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் உதவும் என அஞ்சப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க சீனாவுக்கு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.

மேலும் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள இந்தியாவின் நிறுவனங்கள் ரேடாரின் வரம்பிற்குள் இருக்கும் என விஷயத்தை நன்கு அறிந்த நபர்கள் தெரிவிக்கின்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்லும் இந்தியக் கடற்படை கப்பல்களின் இயக்கத்தை ரேடார் கண்காணிக்க முடியும். கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை ரேடார் கண்காணித்து இந்த வசதிகளில் எரிபொருள் நிரப்பும் என்ற அச்சமும் உள்ளது. தொன்ட்ரா விரிகுடா இலங்கையின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் மேற்கண்ட பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு காலத்தில் இலங்கையின் தலைநகராக இருந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. அதன் மூலம் கடந்த ஆண்டு சீனா பி.எல்.ஏ. உளவுக் கப்பலின் வருகை, பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டது. அவர்கள் எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன் பின்னர் வந்த யுவான் வாங் 5 சீனா உளவு கப்பல் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அப்போதும் சீனா கடற்படையினர் தானியங்கி அடையாள அமைப்பை இயக்கியதாக செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கப்பலை அம்பாந்தோட்டையில் நிறுத்துவதற்கும், எரிபொருள் நிரப்புவதற்கும் மற்ற பொருட்களை எடுத்துக் கொள்வதற்கும் 6 நாட்கள் தங்குவதற்கு இலங்கை அனுமதித்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை 2017 ஆம் ஆண்டு முதல் 1.12 பில்லியன் டாலர்களுக்கு 99 வருட குத்தகைக்கு எடுத்து சீனர்கள் நடத்தி வருகின்றனர். முன்னதாக துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக சீன நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டாலர்கள் இலங்கை அரசால் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே அவ்வப்போது இலங்கை ஆட்சியாளர்கள் அணி சேராமை, நடுநிலைமை, இந்தியா ஜெல் பஸ்ட் போன்ற வெளிவிவகாரக் கொள்கை நிலைப்பாடுகளைப் பற்றி வாய்ச்சவடால் பேசி வருகின்றனர். தற்போது இலங்கையில் சீனா ரேடார் தளத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்ற செய்தி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது என்று இலங்கையை தளமாகக் கொண்ட சுயாதீன அரசியல் ஆய்வாளர் ஏ.ஜதீந்திர கூறினார். மேலும் திரிகோணமலை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெய்ஜிங்கின் நடமாட்டம் அதிகரித்து வருவதை இந்தியா சந்தேகித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.