;
Athirady Tamil News

மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும்- பிரதமர் மோடி!!

0

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ம் தேதி அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்க அரும்பாடு படும் அனைவருக்கும் உலக சுகாதார தினமான இன்று நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த நமது அரசு தொடர்ந்து பணியாற்றும். மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.