;
Athirady Tamil News

துபாயில் இருந்து கேரளா வந்த விமான பார்சலில் 6 கிலோ தங்கம் கடத்தல்- பெண் உள்பட 6 பேர் கைது!!

0

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தும் சம்பவங்கள் நடந்தது. இதனை கண்காணிக்க சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமான பார்சல்களும் அதிகாரிகளால் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்பே அந்தந்த நபர்களுக்கு வழங்கபபடுகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு பார்சலில் 6 கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. சமையல் அறை பாத்திரங்களுடன் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக பெண் உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.