;
Athirady Tamil News

புதிதாக 5,880 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயர்வு !!

0

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,880 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிப்பு கடந்த 7-ந்தேதி 6,049 ஆகவும், 8-ந்தேதி 6,155 ஆகவும் இருந்த நிலையில் நேற்று 5,357 ஆக குறைந்தது. ஆனால் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,801 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 62 ஆயிரத்து 496 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,481 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 2,385 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 35,199 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லி, இமாச்சலபிரதேசத்தில் தலா 4 பேர், குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் தலா ஒருவர் மற்றும் கேரளாவில் விடுபட்ட 2 மரணங்கள் என மேலும் 14 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,979 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.