;
Athirady Tamil News

45 நாட்களில் கனடா விசா என லட்சக்கணக்கில் ஏமாற்றிய கும்பல் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

0

கனடாவில் வேலை செய்வதற்கான வேலை விசாவை 45 நாட்களில் பெற்றுத்தருவதாக ஏமாற்றிய மோசடியாளர்கள் இருவர் மீது இந்தியாவில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் லூதியானாவில் வாழும் குல்வீர் சிங் என்பவருக்கு, 45 நாட்களில் கனடா பணி விசா பெற்றுத்தருவதாக Davinder Singh Gill மற்றும் Kricpy Khaira என்னும் இருவர் உறுதியளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த உறுதியை நம்பி, தன் மருமகளையும் Québec Acceptance Certificate (CAQ) என்னும் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளார் குல்வீர் சிங். அதற்காக அவர் 4,33,600 ரூபாய் செலுத்தியுள்ளார்.

பின்னர் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததை யடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள குறித்த இருவர் மீதும், ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.