;
Athirady Tamil News

காஞ்சிபுரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!!

0

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பஜார் பகுதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதற்குள் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளைகும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளையர்களின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபரங்களை சேகரித்து வருகின்றனர். ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.