;
Athirady Tamil News

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு -24 மணிநேரத்தில் 500 படையினர் கொன்று குவிப்பு !!

0

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் ஒருவருடத்தை கடந்துள்ளநிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் சுமார் 5,00,000 இராணுவ வீரர்களை குவித்து இருந்தது.

இந்த இராணுவ அதிகரிப்பை தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான பக்மூட்-ஐ முழுமையாக கைப்பற்ற ரஷ்ய இராணுவத்தினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 500 ரஷ்ய வீரர்கள் மோதலில் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அத்துடன் உக்ரைனிய இராணுவத்தின் பொதுப் பணியாளர்கள் சனிக்கிழமையன்று தெரிவித்த தகவலில், ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து குறைந்தது 179,320 வீரர்களை இழந்துள்ளது.

மேலும் கடந்த 7 நாட்களில் ரஷ்யா அவர்களது 7 டாங்கிகள், 10 கவச பாதுகாப்பு வாகனங்கள், 15 பீரங்கி அமைப்புகள், பல ரொக்கெட் லோஞ்சர், ஒரு ஹெலிகொப்டர், 9 தந்திரோபாய அளவிலான ஆளில்லா வான்வழி வாகனங்கள், 13 டிரக்குகள் மற்றும் 5 யூனிட் சிறப்பு உபகரணங்களை இழந்ததாக தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.