;
Athirady Tamil News

தெலுங்கானாவில் கழுத்தை அறுத்து சிறுவன் கொடூர கொலை- நரபலி என சந்தேகம்!!

0

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தின் மையப் பகுதியான சனாத் நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு திருநங்கை (ஹிஜ்ரா) வசித்து வருகிறார். மந்திரவாதியான இவர் காளி உள்ளிட்ட அம்மன் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து குறி சொல்லி வந்தார். இவரிடம் குறி கேட்பதற்காகவும் மந்திரங்கள் செய்வதற்காகவும் தினமும் ஆட்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திருநங்கை அந்த பகுதியை சேர்ந்த அப்துல் வாஹித் (வயது 8) என்ற சிறுவனை நைசாக பேசி வீட்டிற்குள் அழைத்து சென்று, சிறப்பு பூஜைகள் செய்து நள்ளிரவில் சிறுவனை நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

சிறுவன் வாஹித் திடீரென காணாமல் போனதால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். மகன் கிடைக்காததால் சனாத் நகர் போலீசில் சிறுவனின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை திருநங்கை வீட்டின் அருகே இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்தபோது கால்வாயில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிறுவனின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.

இதையடுத்து திருநங்கையின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சாமி சிலை முன்பாக ரத்தம் உறைந்து கிடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த திருநங்கையின் வீட்டில் இருந்த டிவி-பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார். திருநங்கையையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்களிடமிருந்து திருநங்கையை மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்தனர். மேலும் சிறுவனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நரபலி கொடுத்ததற்கான எந்த வித ஆதாரங்களும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.