;
Athirady Tamil News

கர்நாடக தேர்தல் – ராகுல் காந்தியுடன் ஜெகதீஷ் ஷெட்டர் சந்திப்பு !!

0

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சமீபத்தில் இணைந்தார்.

இதற்கிடையே, ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி-தர்பாத் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகா வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ஜெகதீஷ் ஷெட்டர் முதல் முறையாக இன்று சந்தித்தார். அப்போது தேர்தல் நிலவரம் குறித்து இருவரும் உரையாடினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.