அமெரிக்காவில் பள்ளி கலை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு- 9 பேர் படுகாயம்!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜெஸ்பூரில் பள்ளி உள்ளது. இங்கு நேற்று இரவு நாட்டிய கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான்.
இதில் 9 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துசெல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதன் யார்? என்று தெரியவில்லை.