;
Athirady Tamil News

பறவை மோதியதால் விமானத்தில் தீ!!

0

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சென்று கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியது. இதனால் விமானத்தின் என்ஜின் இருக்கும் பகுதியின் ஒருபுறத்தில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ பிடிக்க தொடங்கியது.

இதையடுத்து உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் விமானத்தில் தீ பிடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.