;
Athirady Tamil News

கொடிகாமத்தில் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியை சேர்ந்த , கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் கோ, கஜீவன் (வயது 25) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகிறது

குறித்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , கொடிகாமம் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.