;
Athirady Tamil News

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு- புதிதாக 9,629 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து உள்ளது. நேற்று பாதிப்பு 6,660 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,629 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4.49 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 11,967 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 45 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 61,013 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் தலா 3 பேர் உள்பட 19 பேரும், கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 10 என மேலும் 29 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 398 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.